செய்திகள் தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் இந்த நிதியாண்டில் 80 பில்லியனைச் செயற்கை நுண்ணறிவில் செலவிடும்
நியூ யார்க்:
செயற்கை நுண்ணறிவில் (AI) சுமார் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிட திட்டமிடுவதாகவும், இது எதிர்கால வளர்ச்சியின்போது அமெரிக்கா இந்தத் தொழில்நுட்பத்தில் உலகில் முன்னணி நிலையில் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது என மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பல வழிகளில், செயற்கை நுண்ணறிவு இக்காலத்தின் மின்சக்தி போன்று செயல்படுகிறது. இதனால் அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்காவின் தொழில்நுட்ப வெற்றிக்கான அடித்தளத்தை அமைக்க முடியும் என ஸ்மித் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் மற்றும் தேசிய அறிவியல் நிதியத்துடன் ஆய்வுகளுக்கான நிதி அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மூலம் தங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பையும், காங்கிரஸையும் செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்திற்கு ஆதரவினை விரிவாக்குமாறு ஸ்மித் அழைப்பு விடுத்தார்,
சீனா, அமெரிக்கா, உலகின் பல நாடுகளில் தங்கள் செயற்கை நுண்ணறிவு முறைகளை பரப்புவதில் போட்டியிடுகின்றன என்பதையும் ஸ்மித் சுட்டிக் காட்டினார்
ஆகவே, அமெரிக்காவுக்கு உலகளாவிய எந்திரங்களை விரைவாக ஆதரிக்க ஒரு நிபுணத்துவ சர்வதேச திட்டம் தேவை என்றார் அவர்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:28 pm
2 விண்கலன்களை இணைத்து இஸ்ரோ சாதனை
January 17, 2025, 12:06 pm
இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா
January 16, 2025, 11:13 am
அமெரிக்காவிலிருந்து நிலாவில் ஆய்வு நடத்த 2 லேண்டர்கள் அனுப்பப்பட்டன
January 12, 2025, 8:37 pm
விண்வெளியில் நடக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ்
January 5, 2025, 8:45 pm
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்தன: இஸ்ரோ
December 19, 2024, 5:18 pm
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
December 12, 2024, 11:47 am
ChatGPT சேவை உலகளாவிய நிலையில் திடீர் முடக்கம்: பயனர்கள் புகார்
December 10, 2024, 10:43 am
நவீன மனிதக் குளியல் இயந்திரத்தை ஜப்பானின் சயின்ஸ் கோ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது
November 20, 2024, 8:47 am