
செய்திகள் தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் இந்த நிதியாண்டில் 80 பில்லியனைச் செயற்கை நுண்ணறிவில் செலவிடும்
நியூ யார்க்:
செயற்கை நுண்ணறிவில் (AI) சுமார் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிட திட்டமிடுவதாகவும், இது எதிர்கால வளர்ச்சியின்போது அமெரிக்கா இந்தத் தொழில்நுட்பத்தில் உலகில் முன்னணி நிலையில் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது என மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பல வழிகளில், செயற்கை நுண்ணறிவு இக்காலத்தின் மின்சக்தி போன்று செயல்படுகிறது. இதனால் அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்காவின் தொழில்நுட்ப வெற்றிக்கான அடித்தளத்தை அமைக்க முடியும் என ஸ்மித் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் மற்றும் தேசிய அறிவியல் நிதியத்துடன் ஆய்வுகளுக்கான நிதி அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மூலம் தங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பையும், காங்கிரஸையும் செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்திற்கு ஆதரவினை விரிவாக்குமாறு ஸ்மித் அழைப்பு விடுத்தார்,
சீனா, அமெரிக்கா, உலகின் பல நாடுகளில் தங்கள் செயற்கை நுண்ணறிவு முறைகளை பரப்புவதில் போட்டியிடுகின்றன என்பதையும் ஸ்மித் சுட்டிக் காட்டினார்
ஆகவே, அமெரிக்காவுக்கு உலகளாவிய எந்திரங்களை விரைவாக ஆதரிக்க ஒரு நிபுணத்துவ சர்வதேச திட்டம் தேவை என்றார் அவர்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2025, 10:22 am
சீனா 10G இணையச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
April 16, 2025, 12:01 pm
தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் நுட்பவியல் விழா
March 25, 2025, 10:23 pm
இலங்கையில் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை
March 22, 2025, 4:55 pm
மாரடைப்பை முன்கூட்டியே 96% துல்லியமாக கண்டுபிடிக்கும் செயலி: 14 வயது சிறுவன் சாதனை
March 19, 2025, 7:56 am
9 மாதங்களுக்குப் பின் பூமியில் கால் பதித்துள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்
March 17, 2025, 12:32 am
விண்வெளி நிலையத்தில் புதிய குழுவுக்கு வரவேற்பு: பூமிக்கு திரும்ப தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
March 1, 2025, 2:19 pm
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது
February 27, 2025, 5:06 pm
Instagram Reels - தனிச் செயலியாகலாம்
February 17, 2025, 11:38 am
'Grok 3' புதிய AI வசதியை வெளியிடவிருக்கும் எலோன் மஸ்க்
January 27, 2025, 1:50 pm