
செய்திகள் இந்தியா
மணிப்பூர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் முதல்வர்
இம்பால்:
மணிப்பூரில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இனக் கலவரத்துக்கு அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகிஜோ சமூகத்தினருக்கும் இடையேயான மோதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆண்டு மே முதல் அக்டோபர் வரை, மாநிலத்தில் 408 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன. காவல் நிலையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து சமூகத்தினரும் ஒருவரையொருவர் மன்னித்து, கடந்த கால தவறுகளை மறக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மணிப்பூருக்கு பிரதமர் மோடி சென்று முதல்வர் பிரேன் சிங்கை போல, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2025, 8:03 pm
கேரளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஒருநாள் பெய்த மழையில் மோசமாக சேதம...
May 23, 2025, 7:26 pm
24 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை: சூதாட்ட செயலிகளை தடை செய்ய மனு மீது ஒன்றிய ...
May 22, 2025, 9:53 am
கேஎல்ஐஏவிலிருந்து கடத்தப்பட்ட 3,000 ஆமைகளுடன் 2 இந்திய நாட்டவர்கள் பெங்களூருவில் ...
May 21, 2025, 7:51 pm
'இந்தியில்தான் பேசுவேன்’ என வாக்குவாதம் செய்த SBI வங்கி அதிகாரி பணியிட மாற்றம்: சி...
May 21, 2025, 3:56 pm
மே 21 1991 : காங்கிரஸ் கட்சியின் தீபச் சுடர் அணைந்த கருப்பு தினம்
May 20, 2025, 12:15 pm
திருப்பதியில் 10 மாடிகளுடன் ரூ.500 கோடியில் புதிய பஸ் நிலையம்: வி ஐ பி கள் வசதிக்...
May 18, 2025, 7:23 pm
ஹைதரபாத்தின் சார்மினார் பகுதியில் கடுமையான தீ விபத்து: 17 பேர் பலி
May 17, 2025, 1:59 pm
மழைக்காலங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது இனி கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும்: ...
May 16, 2025, 1:34 am
ட்ரம்ப்பை விமர்சித்து பதிந்த கருத்தை அவசரமாக நீக்கிய நடிகை கங்கனா
May 14, 2025, 2:50 pm