
செய்திகள் இந்தியா
பள்ளிவாசல் - கோயில் மோதலை ஹிந்துத்துவா தலைவர்கள் கிளப்புவது ஏற்கமுடியாது: மோகன் பகவத்
புது டெல்லி:
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டியதைத் தொடர்ந்து, அதேபோல் பிற பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் - கோயில்கள் இடையே மோதலை ஹிந்துத்துவா தலைவர்கள் கிளப்புவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸின் இந்தக் கருத்துக்கு ஒன்றிய அரசு சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
மோகன் பகவத் நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியர்கள் சமூக நல்லிணக்கத்தோடு பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறோம். இதை உலகளவில் கொண்டுசேர்க்க வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதைப்போல் பிற பகுதிகளில் பள்ளிவாசல்கள் அமைந்துள்ள இடங்களில் கோயில்கள் இருந்ததாகக்கூறி சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இந்த விவகாரங்களை கிளப்பி ஹிந்துத்துவா தலைவர்களாக மாற சிலர் முயற்சிக்கின்றனர். இதை ஏற்க முடியாது என்றார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புதான் இதுபோன்று பிரச்சினைகளை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm