
செய்திகள் இந்தியா
பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை: மனைவி, மாமியார், மைத்துனர் கைது
பெங்களூரு:
பெங்களூரில் மனைவி குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட ஐடி பொறியாளர் அதுல் சுபாஷின் மனைவி, மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதுல் சுபாஷ் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரின் துன்புறுத்தல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கடிதத்தில் குற்றம்சாட்டினார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் அவரது மனைவி நிகிதா சிங்கானியா, அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா ஹரியாணாவின் குருகிராமிலும் அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகியோர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜிலும் கைது செய்யப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm