
செய்திகள் இந்தியா
அரசமைப்புச் சட்டம் சங் பரிவாரின் புத்தகமல்ல: மக்களவையில் பிரியங்கா அதிரடி கன்னிப்பேச்சு
புது டெல்லி:
நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சை வெள்ளிக்கிழமை நிகழ்த்திய வயநாடு எம்பி பிரியங்கா,அரசமைப்புச் சட்ட புத்தகம் என்பது சங் பரிவார் அமைப்பின் விதி புத்தகமல்ல என்பதை பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அதிரடியாக பேசினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி மக்களவையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, அரசமைப்புச் சட்ட புத்தகத்தை வணங்கும் பிரதமர் மோடி சம்பல், மணிப்பூர், ஹாத்ராஸ் என எங்கு வன்முறை நடந்தாலும் அதை கண்டுகொள்வதில்லை.
அரசமைப்புச் சட்ட புத்தகம் என்பது நாட்டுடையது என்பதையும் அது சங் பரிவார் அமைப்பின் விதி புத்தகமல்ல என்பதையும் பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை.
நேருவை பெயரை மறைக்க அவர் உருவாக்கிய கல்வி, பொதுத் துறை நிறுவனங்களை மோடி அரசு தனியார் மயமாக்கி வருகிறது. மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைத்திருந்தால் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையே மாற்றி இருப்பார்கள் என்று பிரியங்கா பேசினார்.
பிரியங்காவின் பேச்சு தனது கன்னிப் பேச்சைவிட சிறப்பாக இருந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm