
செய்திகள் மலேசியா
மலேசியாவில் நடுத்தர மக்களின் ஊதியம் உயர்ந்துள்ளது: ரஃபிசி ரம்லி
பெட்டாலிங் ஜெயா:
ஜூன் 2023-ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு ஜூன் 2024-ஆம் ஆண்டுக்கிடையில் நாட்டின் நடுத்தர மக்களின் ஊதிய 2600 வெள்ளியிலிருந்து 2745 வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறினார்.
ஜூன் 2024 இருந்து 2000 வெள்ளிக்கு குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 34.8 சதவீதத்திலிருந்து 32.2 சதவீதமாக குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பள உயர்வு ஒவ்வொரு ஆண்டும் சராசரி சம்பளத்தை உயர்த்த அரசாங்கத்திற்கு உந்துதலாக விளங்குகிறது.
இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் சம்பளமும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
ஒரு மாதத்திற்கு 2,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சி கண்டாலும், குறைந்த ஊதியம் பெறுவது தேசிய பொருளாதாரத்திற்கு இன்னும் சவாலாக உள்ளது.
அந்த வகையில் 2.167 மில்லியன் மலேசியர்களுக்கு சமமான 32.2 சதவீகித தொழிலாளர்களுக்கு இன்னும் மாதம் 2,000 ரிங்கிட் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 6:20 pm
கெஅடிலான் கட்சி பிரிவு கொள்கைகளை நிராகரிப்பதுடன் மடானி கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 22, 2025, 5:48 pm
கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு
October 22, 2025, 5:18 pm
போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm
இந்த வட்டாரத்தின் சிறந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் : ஐஎல்ஓ இயக்குநர் பாராட்டு
October 22, 2025, 2:50 pm