செய்திகள் விளையாட்டு
மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது
ஜார்ஜ்டவுன்:
மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது.
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி பினாங்கில் நடைபெற்று முடிந்தது.
இதன் ஆண்கள் பிரிவில் டெங்கில் தமிழ்ப்பள்ளி அணியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கமும் அதன் தலைவர் பத்துமலை தலைமையில் டெங்கில் தமிழ்ப்பள்ளி அணி இந்த கால்பந்து போட்டியில் களமிறங்கியது.
கடுமையான போராட்டங்களுக்கு பின் டெங்கில் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது.
இவ்வேளையில் அவ்வணியினருக்கு எனது பாராட்டுகள்.
அதே வேளையில் இப்பள்ளி அணியினர் அடுத்தடுத்து பல போட்டிகளில் களமிறங்கவுள்ளனர் என்று பத்துமலை கூறினார்.
முன்னதாக இப்போட்டியில் ஹைலன்ட்ஸ் தமிழ்ப்பள்ளியினர் முதல் இடத்தை பிடித்தனர்.
பெடோங், பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளிகள் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
டெங்கில் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சேஸ்வர் சிறந்த ஆட்டக்காரர் விருதும் சந்தோஸ் சிறந்த கோல் காவலர் விருதையும் பெற்றனர்.
ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஹிட்ஸ்வர் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருதை வென்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 9:48 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: செல்சி வெற்றி
February 13, 2026, 10:02 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: பார்சிலோனா தோல்வி
February 13, 2026, 9:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
February 12, 2026, 10:31 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
February 10, 2026, 9:22 am
சீசன் முடியும் வரை காத்திருங்கள்: மைக்கல் கேரிக்
February 10, 2026, 9:04 am
ரொனால்டோவுக்காக முதலீடு செய்வது லாபகரமானது அல்ல
February 9, 2026, 8:57 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 9, 2026, 8:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
February 8, 2026, 10:18 am
