நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்றுங்கள்: ஈரான் கோரிக்கை

டெஹ்ரான்:

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டுமென ஃபிஃபா நிர்வாகத்திடம் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளின் தலைமையில் நடைபெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த ஃபிப்ரவரி. 28 முதல் போர் நடைபெற்று வருவதால் ஈரானின் கால்பந்து வீரர்கள் அமெரிக்கா செல்வது மிகுந்த ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

இத்துடன், அமெரிக்கா வரும் ஈரானிய கால்பந்து வீரர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இதனால், அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற வேண்டுமென ஃபிஃபா நிர்வாகத்திடம் ஈரானின் கால்பந்து கூட்டமைப்புப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, மெக்சிகோவில் உள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset