செய்திகள் இந்தியா
சிரியாவில் உள்ள இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்
புது டெல்லி:
சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
அலெப்போவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளை கைப்பற்றி தலைநகரை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
ஹாம்ஸ் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிரியாவில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு மறுஅறிவிப்பு வரும் வரை அங்கு பயணிப்பதை இந்திய குடிமக்கள் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே அங்கு வசித்து வருவோர் விமானங்கள் மூலம் உடனடியாக இந்தியா திரும்பவும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்தை +963 993385973 என்ற அவசரகால உதவி எண் மூலம் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 8:12 pm
இந்தியப் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சந்திப்பு
January 16, 2025, 8:57 pm
இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா
January 15, 2025, 6:26 pm
இந்தியத் தலைநகரில் மோசமான வானிலை: 100 விமானங்கள், 26 ரயில்கள் தாமதம்
January 15, 2025, 12:49 pm
மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு
January 14, 2025, 8:47 pm
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1,75,025 ஹஜ் பயணிகள் புனிதப் பயணம் செல்ல அனுமதி
January 14, 2025, 8:27 am
இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன் அளித்ததற்கு பதிலடியாக வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன் வழங்கியது
January 13, 2025, 3:27 pm
கும்பமேளா தொடங்கியது: 400 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டுள்ளனர்
January 12, 2025, 7:17 pm
ரூபாய் மதிப்பு சரிவடைந்ததற்கு ஒன்றிய அரசு விளக்கமளிக்க வேண்டும்: பிரியங்கா
January 12, 2025, 6:50 pm
மாணவிகளின் மேல் சட்டையை கழற்றி வீட்டுக்கு அனுப்பிய முதல்வர்
January 11, 2025, 10:00 pm