
செய்திகள் இந்தியா
சிரியாவில் உள்ள இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்
புது டெல்லி:
சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
அலெப்போவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளை கைப்பற்றி தலைநகரை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
ஹாம்ஸ் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிரியாவில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு மறுஅறிவிப்பு வரும் வரை அங்கு பயணிப்பதை இந்திய குடிமக்கள் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே அங்கு வசித்து வருவோர் விமானங்கள் மூலம் உடனடியாக இந்தியா திரும்பவும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்தை +963 993385973 என்ற அவசரகால உதவி எண் மூலம் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm