செய்திகள் உலகம்
ஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: 38 பேர் பலி
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினருக்கான பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 38 பேர் பலியாகினர்; 70 பேர் காயமடைந்தனர்.
காந்தஹார் நகரிலுள்ள இமாம் பர்கா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இந்தத் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
ஷியா பிரிவினருக்கான அந்த மசூதியில், உடலில் வெடிகுண்டை மறைத்து வைத்திருந்த சிலர் அதனை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தினர்.
முதலில் இரண்டு பேர் பள்ளிவாசலின் நுழைவு வாயிலில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்; பின்னர் அந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி மேலும் இரு சிலர் மசூதிக்குள் நுழைந்து, தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களிடையே புகுந்து தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 70 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
குண்டுஸ் மாகாணத் தலைநகர் குண்டுஸிலுள்ள ஷியா பிரிவு மசூதியில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 46 பேர் பலியாகினர். அந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே பொறுப்பேற்றது.
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 14, 2025, 6:33 pm
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
December 13, 2025, 10:57 am
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
