செய்திகள் மலேசியா
'மித்ரா'வுக்கான நிதிகள் மாயமானது குறித்து விசாரணை: ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய உருமாற்ற பிரிவு எனப்படும் 'மித்ரா'வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தின்போது 'மித்ரா'வுக்கான நிதிகள் தவறாக கையாளப்பட்டுள்ளதாகவும் மாயமானதாகவும் புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஊழல் தடுப்பு ஆணையம் தனது முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'மித்ரா' விவகாரம் குறித்து ஒரு புகாரைப் பெற்றுள்ளதாகவும், அரசு சார்பற்ற அமைப்பான 'NGO Pemuda Gen Z' அப் புகாரை அளித்துள்ளதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
நிதி ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகள், நிதியைப் பெற்றவர்கள் அதை செலவிட்ட விதம், தனி நபரோ அல்லது நிறுவனங்களோ செய்திருக்கக் கூடிய ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை குறித்து பல்வேறு கோணங்களில் முழுமையான விசாரணை நடைபெறும் என ஊழல் தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.
'மித்ரா'வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து நடப்பு ஒற்றுமை அமைச்சு புகார் அளிக்கலாம் என அந்த அமைச்சின் முன்னாள் அமைச்சரான வேதமூர்த்தி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
November 5, 2025, 10:35 am
1 எம்டிபி நிதியுடன் நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை: ஷாபி
November 5, 2025, 10:34 am
அமெரிக்காவில் யூபிஎஸ் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் மரணம்
November 5, 2025, 10:33 am
மலேசிய நகரத்தார்கள் வர்த்தக தொழில் துறைகளில் மீண்டும் முத்திரை பதிக்க வேண்டும்: டத்தோ இராமநாதன்
November 5, 2025, 9:03 am
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து உச்சமன்றம் முடிவு: மொஹைதின்
November 4, 2025, 11:20 pm
தர்ம மடானி திட்டம்; சமூக ஒற்றுமைக்கும் எதிர்கால நலனுக்கும் குணராஜ் முன்வைத்த அறைகூவலுக்கு மாமன்றம் ஆதரவு
November 4, 2025, 3:21 pm
