செய்திகள் தமிழ் தொடர்புகள்
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை கேட்டு இருவேல்பட்டு பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, அந்த ஆற்றின் கரையோரங்களிலுள்ள சுந்தரேசபுரம், சித்தலிங்கமடம், டி.எடையார், திருவெண்ணெய்நல்லூர், தொட்டிக்குடிசை, சின்னசெவலை, மழவராயனூர், அரசூர், இருவேல்பட்டு, காரப்பட்டு, பொய்கை அரசூர், ஆனத்தூர், சேமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்தப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளப் பெருக்கால் குடியிருப்புகள், உடைமைகளை இழந்த தங்களுக்கு, மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டஅத்தியாவசியத் தேவைகள் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு அலுவலர்கள் வரவில்லை. நிவாரண உதவிகள் செய்யவில்லை எனக்கூறி, சுமார் 500-க்கும் மேற்பட்ட இருவேல்பட்டு கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் காலை 8 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்திலிருந்து அரசூர் நோக்கிச் சென்றபோது, இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம், அமைச்சர் பொன்முடி காரிலிருந்து இறங்கி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கிருந்த சிலர் சேற்றை வாரி வீசியதில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.
கவுதமசிகாமணி, ஆட்சியர் பழனி உள்ளிட்டோரின் சட்டை மீது தெறித்தது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி.க்கள் விழுப்புரம் தீபக் ஸ்வாட்ச், திருவாரூர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமைச்சர் பொன்முடியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 4:14 pm
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
November 19, 2025, 4:22 pm
சென்னையில் நகை வணிகர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை
November 19, 2025, 3:19 pm
எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
November 19, 2025, 3:01 pm
விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜனவரியில் முடிவு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
November 19, 2025, 2:03 pm
சபரிமலைக்கு விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை
November 18, 2025, 6:02 pm
பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக்கக்கூடாது: மருத்துவர்கள் அறிவுரை
November 17, 2025, 12:16 pm
சென்னையில் ஒரே நாளில் 111 இடங்களில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றம்
November 16, 2025, 9:25 am
நானும் தலைவர்தான்; எங்களையும் அழைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் வேண்டுகோள்
November 15, 2025, 3:53 pm
பெரும் வெற்றியைப் பெற்றுள்ள மூத்த தலைவர் நிதிஷ் குமாருக்கு எனது பாராட்டுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
November 14, 2025, 10:58 pm
