செய்திகள் மலேசியா
நாட்டில் மோசமடையும் வெள்ளம்: இதுவரை 3 பேர் பலி; 95 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்
கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. இந்த வெள்ளத்தினால் இதுவரை 3 பேர் பலியான வேளையில் 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பான NADMA கூறியது
கிளாந்தான் மாநிலத்தில் இரு மரணங்கள் பதிவு செய்யப்பட்ட வேளையில் 63,761 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
திரெங்கானு மாநிலத்தில் 22,511 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளையில் 228 வெள்ள நிவாரண மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அமைப்பு தெரிவித்தது
கிழக்கு கரை மாநிலங்களான கிளாந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்கள் இந்த முறை வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாக துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தெரிவித்தார் .
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 3:33 pm
சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்குப் பெர்கேசோ பாதுகாப்பு: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
May 2, 2026, 3:11 pm
கேஎல்ஐஏ-வில் பிச்சை எடுத்த வெளிநாட்டவர்கள்: இருவர் கைது
May 2, 2026, 11:42 am
மலேசிய யாத்ரீகர் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசல் வளாகத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்
May 2, 2026, 11:41 am
பல்கலைக்கழக மாணவர் 61 முறை குத்திக் கொலை
May 2, 2026, 11:02 am
