செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் சூதாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சூதாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூதாடிகளின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டில் இல்லாத அளவாகக் குறைந்திருப்பதாய் அண்மைய ஆய்வில் தெரியவந்தது.
பிரச்சினைக்குரிய சூதாட்டம் மீதான சிங்கப்பூர் தேசிய மன்றம் ஆய்வை நடத்தியது. மூவாயிரம் பேர் அதில் பங்கெடுத்தனர்.
40 விழுக்காட்டினர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாய்த் தெரிவித்தனர்.
சூதாட்டம் ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும் சாத்தியம் சுமார் ஒரு விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரில் சூதாடுவோர்...
2023 - 40%
2020 - 44%
2017- 52%
எண்ணிக்கை படிப்படியாகக் குறைகிறது. ஆனால் தொகையோ அதிகரிக்கிறது.
சூதாட்டத்துக்காக மாதந்தோறும் சராசரியாக இப்போது ஒருவர் 25 வெள்ளிச் செலவிடுவதாய் ஆய்வு சொன்னது.
மூவாண்டுக்கு முன்னர் அது 15 சிங்கப்பூர் வெள்ளியாக இருந்தது.
அதிகம் போவது 4D. சிங்கப்பூரில் மூவரில் ஒருவர் அதற்குப் போகின்றனர்.
அடுத்து வருவது TOTO. மக்களில் 29 விழுக்காட்டினர் இதற்கு வருவதாக ஆய்வு சொல்கிறது.
இணையத்தில் சூதாடுவது அதிகரித்துள்ளது.
இணையத்தில் சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகள் சற்று அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக அதிகாரிகள் கூறினர்.
அது 0.7 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காட்டை எட்டியுள்ளது.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றது அந்த மன்றம்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 3:19 pm
பிரபல ஷாவ்லின் கோவில் முன்னாள் தலைவருக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை
May 30, 2026, 11:16 am
தெற்கு சூடானில் மனிதாபிமான பேராபத்து: மக்களுக்கு அவசர உணவு உதவி தேவை என ஐ.நா. எச்சரிக்கை
May 29, 2026, 11:50 am
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி: ஆளில்லா வானூர்தி பறக்கத் தடை
May 28, 2026, 12:38 pm
இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தலைவர் உயிரிழந்தார்
May 28, 2026, 12:28 pm
“குளிரூட்டும் அமைப்பு கோளாறா?”: ஒரே வார்டில் 6 பச்சிளம் குழந்தைகள் பலி
May 27, 2026, 11:45 am
“அணு சக்தி” ஆற்றலைக் காட்டும் வடகொரியா: புதிய ஏவுகணை சோதனையால் உலக நாடுகள் பதற்றம்
May 27, 2026, 10:25 am
