
செய்திகள் உலகம்
நார்வே: வில், அம்பு மூலம் தொடர் தாக்குதல்; 5 பேர் உயிரிழந்தனர்: பிரதமர் எர்னா சோல்பெர்க்
ஒஸ்லோ:
நார்வேயின் காங்ஸ்பெர்க் நகரில் நேற்று வில் மற்றும் அம்பு ஆயுதம் ஏந்திய ஒருவர் நடத்திய தொடர் தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு வில் மற்றும் அம்பு பயன்படுத்தப்பட்டது என்பதையும், ஒரே நபர்தான் இந்த தொடர் தாக்குதலில் ஈடுபட்டார் என்றும் காங்ஸ்பெர்க் போலீஸ் தலைவர் ஒய்விந்த் ஆஸ் உறுதிப்படுத்தினர்.
இத் தாக்குதலில் மற்ற ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும், இது பயங்கரவாத தாக்குதலா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் 37 வயதான டேனிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், "இன்றிரவு காங்ஸ்பெர்க்கிலிருந்து வரும் தகவல்கள் திகிலூட்டுகிறது, மக்களில் பலர் பயப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது" என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am