செய்திகள் மலேசியா
மக்கள் படும் சிரமங்கள் ஏழையாக இருந்தால் மட்டுமே புரியும்; தீபாவளிக்கு பின் தான் மக்கள் உண்மையாக சிரமப்படுகிறார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
மக்கள் படும் சிரமங்கள், கஷ்டங்களும் ஒரு ஏழையாக இருந்தால் மட்டுமே புரியும். ஆக தீபாவளிக்கு பின் தான் மக்கள் உண்மையாக சிரமப்படுகிறார்கள் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
மஇகா தேசிய தலைவருடன் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது.
மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள் டத்தோ மோகனா முனியாண்டி, சிவசுப்பிரமணியம், அண்ட்ரூ டேவிட், சுகன் ஆகியோரின் முயற்சியில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவிப் பொருட்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
என்ன தீபாவளிக்கு பின் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என்று கேலியாக பேசுகின்றனர்.
தீபாவளி கொண்டாட்டம் என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இருக்கும் பணத்தை எல்லாம் செலவு செய்து அப் பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதனால் மக்கள் தீபாவளிக்கு பின்தான் அதிகம் சிரமப்படுகின்றனர். இதை யாராலும் மறுக்க முடியாது.
இந்நேரத்தில் வழங்கப்படும் உதவிகள் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
ஆக மொத்தத்தில் ஏழை மக்களின் சிரமங்கள் ஏழையாக இருந்தால் மட்டுமே புரியும்.
வாய் இருக்கிறது சமூக ஊடகங்களில் பேசுபவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 6:01 pm
நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்
March 16, 2026, 6:00 pm
நோன்புப் பெருநாள் காலத்தில் மலேசியாவின் வானிலை: MetMalaysia முன்னறிவிப்பு
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
