
செய்திகள் மலேசியா
எல்லை திறப்பு குறித்து பரிசீலிக்க சிங்கப்பூர் அரசுக்கு ஜோகூர் மந்திரி பெசார் கோரிக்கை
ஜோகூர்:
மலேசிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள SOPக்களின் அடிப்படையில், இரு நாடுகளின் எல்லைகளைத் திறப்பது குறித்து சிங்கப்பூர் அரசு பரிசீலிக்க வேண்டும் என ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முஹம்மத் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியாவில் தற்போது மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நடவடிக்கையானது, சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மலேசியர்களை மனதளவில் பாதித்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
"ஏன் தங்களால் மட்டும் நாடு திரும்ப முடியவில்லை? ஏன் மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இயலவில்லை? எனும் கேள்விகள் அவர்கள் மனதில் எழுந்திருக்கும். இந்தச் சூழ்நிலை அவர்களுக்கு வியப்பையும் ஏற்படுத்தி இருக்கும்," என்றார் முதல்வர் ஹஸ்மி முஹம்மத்.
சிங்கப்பூரில் தற்போது தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டி உள்ளது, எனினும் இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையைத் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை சிங்கப்பூர் அரசு நிறுத்திவிடக் கூடாது என்றார்.
"சிங்கப்பூர் அரசாங்கத்துடன் மலேசிய சுகாதார அமைச்சு கலந்தாலோசித்துள்ளது. எல்லைத் திறப்பு குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் முன்னர் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பை குறைக்க அந்நாட்டு அரசாங்கம் விரும்புகிறது. அதற்காக மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது.
"என்னைப் பொறுத்தவரை சிங்கப்பூரில் எத்தகைய நிலை காணப்பட்டாலும், தற்போது நம்மிடம் முழுமையான தடுப்பூசி உள்ளது என்பதுதான் முக்கியம். எனவே தொற்று எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்கள் என்பது கவலைக்குரிய விஷயமல்ல.
"முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் நாம் கொரோனா கிருமியுடன்தான் வாழ்ந்தாக வேண்டும். எனவே தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் எல்லைத் திறப்பும் சாத்தியம்தான்," என்று மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முஹம்மத் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 8:39 am
Mahsa பல்கலைக்கழகத்தில் இசைமுரசு நாகூர் ஹனீஃபாவின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
September 17, 2025, 8:06 pm
விபத்தில் மரணமடைந்த மாணவி நிமலா சங்கரி குடும்பத்தாருக்கு யூனிமேப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது
September 17, 2025, 7:02 pm
முஸ்லிம் அல்லாத கட்சிகளால் பாஸ் எளிதில் குழப்பமடையக் கூடாது: டத்தோஸ்ரீ ரமணன்
September 17, 2025, 6:34 pm
ஷாரா அழுததுடன் திருடியதை மறுத்தார்; கடவுள் மீது சத்தியம் செய்தார்: சாட்சி
September 17, 2025, 6:32 pm
எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் படிப்புகளுக்கு உயர் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும்: நிக் நஸ்மி
September 17, 2025, 6:31 pm
112 இடங்களை வெல்ல முடியாத கட்சிகள் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் அர்த்தமில்லை: துன் மகாதீர்
September 17, 2025, 6:29 pm
பாஸ் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு பெர்சத்து நிதியே காரணம்: மார்சுக்கி
September 17, 2025, 6:28 pm
ரபிசியின் மகனைத் தாக்கியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை; சிசிடிவி தெளிவாக இல்லை: ஐஜிபி
September 17, 2025, 1:27 pm