செய்திகள் மலேசியா
மலாக்காவின் காபந்து - பராமரிப்பு முதல்வராக சுலைமான்: ஏற்க இயலாது என்கிறது பக்காத்தான்
கோலாலம்பூர்:
மலாக்காவில் காபந்து - பராமரிப்பு முதல்வராக டத்தோஸ்ரீ சுலைமான் மொஹம்மத் அலி நீடிப்பதை ஏற்க இயலாது பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.
மாநில சட்டமனறத்தில் சுலைமான் தனக்குரிய பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டார் என பக்காத்தான் உச்சமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
அம் மாநிலத்தில் அண்மைக்காலமாக அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இந் நிலையில், பெரும்பான்மையை இழந்துவிட்ட காரணத்தால் காபந்து அரசாங்கத்துக்கு தலைமையேற்கும் தகுதியை சுலைமான் இழந்துவிட்டார் என்பது பக்காத்தானின் வாதமாக உள்ளது.
"மலாக்கா சட்டமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை சுலைமான் இழந்துவிட்டார். இது தெளிவாகத் தெரிகிறது. எனவேதான் காபந்து அரசை வழிநடத்தும் தகுதி அவருக்கு இல்லை எனச் சொல்கிறோம். எனவே அவர் காபந்து முதல்வராக முன்னிறுத்தப்படுவதை ஏற்க இயலாது," என பக்காத்தான் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும், மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்க்கவும் அம்மன்றம் முடிவு செய்துள்ளது.
காபந்து முதல்வர் குறித்து முடிவெடுக்கும் முன்னனர் மாநில எதிர்க்கட்சித் தலைவர் Adly Zahari, சுங்கை ஊடாங் உறுப்பினர் டத்தோஸ்ரீ இத்ரீஸ் ஹாரூன் மற்றும் சுலைமான் தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் பக்காத்தான் உச்ச மன்றம் மேலும் வலியுறுத்தி உள்ளது.
முன்னதாக மலாக்காவின் காபந்து முதல்வராக சுலைமான் நீடிப்பதாக பெர்னாமா செய்தி முகமை தெரிவித்திருந்தது. நேற்று பக்காத்தான் உச்ச மன்றம் வெளியிட்ட அறிக்கையில், அதன் உறுப்புக் கட்சிகளான பிகேஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் மொஹமத் சாபு, ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங், United Progressive Kinabalu Organisation தலைவர் டத்தோஸ்ரீ வில்ஃபிரெட் மடியஸ் டங்காவ் (Datuk Seri Wilfred Madius Tangau) ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 11:44 pm
கோல குபு பாருவில் உள்ளூர் வேட்பாளரான கைரூல் அஸ்ஹாரியை களமிறக்குகிறது தேசியக் கூட்டணி
April 25, 2024, 10:30 pm
பொய்யான குற்றச்சாட்டுகளால் ஓர் இனத்தையே திசை திருப்புகின்றனர்: டாக்டர் சத்தியபிரகாஷ்
April 25, 2024, 10:27 pm
கோல குபு பாரு தேர்தலை புறக்கணிக்க சொல்வது முட்டாள்தனமானது: குணராஜ் சாடல்
April 25, 2024, 7:10 pm
மும்மொழி அகராதி மாணவர்களுக்கு பெரும் பலனைத் தரும்: மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி
April 25, 2024, 7:06 pm
உலு சிலாங்கூரில் 324 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம்: மந்திரி புசார் வழங்கினார்
April 25, 2024, 5:12 pm
கோல குபு பாருவில் பெண் திட்டத்திற்கான முகப்பிடம்; இந்திய பெண்கள் பயன் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
April 25, 2024, 4:40 pm
முன்னாள் பிரதமர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்: பிரதமர் அன்வார்
April 25, 2024, 4:39 pm
துன் மகாதீர் மற்றும் அவரின் இரு மகன்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது: அசாம் பாக்கி
April 25, 2024, 4:38 pm
ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியது தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது: அசாம் பாக்கி
April 25, 2024, 3:51 pm