
செய்திகள் இந்தியா
ரூ. 500, ரூ.1000 திரும்பப் பெற்று 8-ம் ஆண்டு; ஏகபோகத்துக்கு வழிவகுத்தது: ராகுல்
புது டெல்லி:
ரூ. 500, ரூ.1000 திரும்பப் பெற்று 8 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்து, ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி 2016-இல் இதே நாளில் ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
ஊழல், கருப்புப் பணத்தை தடுக்க ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைப்பதாக அவர் கூறினார். ஆனால், பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்றுதான் இந்தியாவில் ரொக்கப் பரிவர்த்தனை அதிகமாக உள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புசாராத் துறைகளை அழித்ததன் மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது.
பொதுமக்களிடம் இருந்த பணம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உடன் ஒப்பிடுகையில், 2013-14ம் ஆண்டில் 11 சதவீதத்தில் இருந்து 2016-17-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 8 சதவீதமாக குறைந்திருந்தது.
இதையடுத்து, 2020-21இல் அது 14 சதவீதமாக உயர்ந்து, இறுதியாக 2022-23-ஆம் ஆண்டில் அது 12 சதவீதத்தில் உள்ளது என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm