செய்திகள் மலேசியா
நான் பணி ஓய்வு பெற்றேனா? ஜொகூர் காவல்துறைத் தலைவர் எம்.குமார் மறுப்பு
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் பணியிலிருந்து தாம் பணி ஓய்வு பெற்றதாக வெளிவந்துள்ள தகவலை ஜொகூர் காவல்துறைத் தலைவர் எம்.குமார் மறுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தாம் பணி ஓய்வு பெற்றதாக வெளிவந்துள்ள செய்தி போலியானது என்றும் அவர் உறுதியாக கூறினார்.
போலிச் செய்திகளைப் பரப்புவது தீவிரமான ஒன்று என்றும், தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்ட அமலாக்கத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தில் பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்வதில் வழக்கம் போல் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் மேற்கொண்டு வருவதால், தனது ஓய்வு தொடர்பாக டிக்டாக்கில் வைரலான காணொலி உண்மையற்றது மற்றும் ஆதாரமற்றது என்று குமார் கூறினார்.
குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நம்பகத்தன்மையற்ற மற்றும் பொறுப்பற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று ஜொகூர் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் நிகழும் மாற்றங்கள் குறித்து அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 7:44 pm
பெர்லிஸ் மந்திரி புசார் பதவியை முகமட் சுக்ரி ராஜினாமா செய்தார்
December 25, 2025, 2:55 pm
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்
December 25, 2025, 2:52 pm
காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை
December 25, 2025, 2:52 pm
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
December 25, 2025, 2:50 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்
December 25, 2025, 1:21 pm
அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்
December 25, 2025, 12:54 pm
வீட்டுக் காவல் விண்ணப்பம் தோல்வியடைந்த பிறகு, 1 எம்டிபி ஊழல் வழக்கில் நஜிப்பின் தலைவிதி நாளை முடிவு செய்யப்படும்
December 25, 2025, 11:01 am
