செய்திகள் இந்தியா
விவசாயிகள் மீது கார் ஏற்றிய இந்திய அமைச்சரின் மகன்: போலீஸார் விசாரிக்க அனுமதி
லக்கீம்பூர்:
உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூர் வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்திய ஒன்றிய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் லக்கீம்பூர் கெரி பகுதியில் விவசாயிகள் கடந்த 3ஆம் தேதி நடத்திய பேரணியில் கார் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உயிரிழந்தனர்.
அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தாக்கியதில் இந்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் கார் ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள் உயிரிழந்தனர்.
சம்பவத்தின்போது சென்ற காரில் அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
இந்தச் சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தர பிரதேச அரசின் விசாரணை நடவடிக்கைகளுக்குக் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.
அதையடுத்து, லக்கீம்பூர் வன்முறை தொடர்பான விசாரணையை மாநில காவல் துறை துரிதப்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிஷ் மிஸ்ரா நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவை அக்டோபர் 12- 15ஆம் தேதி வரையில் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 6:44 pm
திருப்பதி பயணத்தில் நேர்ந்த துயரம்: பேருந்து விபத்தில் 10 பேர் கருகிப் பலி
March 29, 2026, 6:43 pm
பறிபோன வாழ்வாதாரம்: கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த மழையால் தோட்டக்கலைப் பயிர்கள் மொத்தமாக நாசம்
March 26, 2026, 6:01 pm
மாணவியைக் காதலிப்பதாகக் கூறிய பேராசிரியருக்குச் செருப்படி; வைரலாகும் காணொலி
March 26, 2026, 6:00 pm
முகநூல் நட்பால் வந்த வினை: ஓய்வுபெற்ற அதிகாரியைக் கடத்தி கொள்ளையடித்த பெண் கைது
March 26, 2026, 5:58 pm
"ராகுல் காந்திக்கு அடிப்படை அரசியல் புரியவில்லை": கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதிலடி
March 26, 2026, 5:28 pm
குஜராத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றபட்டது
March 26, 2026, 5:08 pm
