செய்திகள் இந்தியா
இரவோடு இரவாக வீட்டை இடித்த உ.பி. அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்
புது டெல்லி:
சாலை விரிவாக்கப் பணிக்காக நோட்டீஸ் அளிக்காமல் இரவோடு இரவாக வீட்டை இடித்ததற்காக உத்தர பிரதேச அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
2019இல் உத்தர பிரதேசத்தின் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத் திட்டத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முன்அறிவிப்பு இல்லாமல் இடிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பில், அரசு புல்டோசருடன் வந்து ஒரே இரவில் மக்களின் வீட்டை இடித்துவிட முடியாது.
நிலங்களை கையகப்படுத்திவிட்டு நோட்டீஸ் அளித்த பின்னர் அரசு வீடுகளை இடித்திருக்க வேண்டும். சட்ட விரோதமாக ஒரே இரவில் வீடுகளை இடிப்பது அரசின் மேலாதிக்க நிலையை காட்டுகிறது.
மேலும், ஒரே இரவில் வீட்டை இடித்ததற்கு அதிகாரிகள் அல்லது ஒப்பந்ததாரர் காரணமா? என்று தலைமைச் செயலர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சாலை விரிவாக்கத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த இந்த வழக்கின் உத்தரவை அனைத்து மாநில தலைமைத் செயலர்களுக்கும் உச்சநீதிமன்ற பதிவாளர் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வீட்டை இழந்த உரிமையாளுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டை மாநில அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உத்தர பிரதேச அரசின் புல்டோசர் நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே கடும் அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள து.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
