
செய்திகள் இந்தியா
இரவோடு இரவாக வீட்டை இடித்த உ.பி. அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்
புது டெல்லி:
சாலை விரிவாக்கப் பணிக்காக நோட்டீஸ் அளிக்காமல் இரவோடு இரவாக வீட்டை இடித்ததற்காக உத்தர பிரதேச அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
2019இல் உத்தர பிரதேசத்தின் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத் திட்டத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முன்அறிவிப்பு இல்லாமல் இடிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பில், அரசு புல்டோசருடன் வந்து ஒரே இரவில் மக்களின் வீட்டை இடித்துவிட முடியாது.
நிலங்களை கையகப்படுத்திவிட்டு நோட்டீஸ் அளித்த பின்னர் அரசு வீடுகளை இடித்திருக்க வேண்டும். சட்ட விரோதமாக ஒரே இரவில் வீடுகளை இடிப்பது அரசின் மேலாதிக்க நிலையை காட்டுகிறது.
மேலும், ஒரே இரவில் வீட்டை இடித்ததற்கு அதிகாரிகள் அல்லது ஒப்பந்ததாரர் காரணமா? என்று தலைமைச் செயலர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சாலை விரிவாக்கத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த இந்த வழக்கின் உத்தரவை அனைத்து மாநில தலைமைத் செயலர்களுக்கும் உச்சநீதிமன்ற பதிவாளர் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வீட்டை இழந்த உரிமையாளுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டை மாநில அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உத்தர பிரதேச அரசின் புல்டோசர் நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே கடும் அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள து.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm