நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பேருந்து ஓட்டும் போதே ஓட்டுநருக்கு மாரடைப்பு: நடத்துனரின் அதிவேக செயலால் தடுக்கப்பட்ட பெரும் விபத்து

பெங்களூர்:

பெங்களூருவில் பிஎம்டிசி பேருந்து ஓட்டுநர் வாகனத்தை ஓட்டியபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள நெலமங்கலவில் இருந்து தசனபுரா நோக்கி பேருந்து காலை 11 மணிக்கு சென்று கொண்டிருந்தது.

அந்தப் பேருந்தைக் கிரண் குமார் என்பவர் ஓட்டியுள்ளார்.

இஃநிலையில் பேருந்தை ஓட்டி கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழந்தார்.

அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுமாறுகிறது.

உடனே நடத்துனர் ஓபெலேஷ் சாதுரியமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டார்.

இது தொடர்பான காணொலி சமூக ஊடகத்தில் அதிகமாகப் பகிரப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset