செய்திகள் இந்தியா
உ.பி.யில் மதரஸாக்களை மூடும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து
புது டெல்லி:
உத்தர பிரதேசத்தில் மதராஸாக்களை மூட அலகாபாத் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
2004-இல் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் மதரஸாக்கள் செயல்பட அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் மூலம், உத்தர பிரதேசத்தில் 16,000 மதரஸாக்களில் பயின்று வரும் 17 லட்சம் முஸ்லிம் மாணவ, மாணவிகளின் நலன் காக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், மதரஸா கல்வி வாரியத்தின் நோக்கம் மற்றும் தேவையில் தவறில்லை. இந்த வாரியத்தை அமைப்பது மதச்சார்மின்மையை மீறுவதாக உள்ளது என்ற உயர்நீதிமன்றத்தின் பார்வை சரியல்ல.
சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாப்பது மற்றும் இத்தகைய கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதுமே மாநில அரசின் கடமை என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
விமானிகளுக்கு போதிய ஓய்வளிக்க 130 விமான சேவைகளை குறைக்க முன்வந்தது இண்டிகோ நிறுவனம்
December 27, 2025, 8:20 am
திருப்பதி கோவில் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவர்: விரைவில் தீர்ப்பு
December 26, 2025, 4:13 pm
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
