செய்திகள் மலேசியா
1 எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய நஜிப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
1 எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நஜிப் அதிகார துஷ்பிரயோகம், 1 எம்டிபி நிதி சம்பந்தப்பட்ட பணமோசடி ஆகிய 25 குற்றச்சாட்டுகளில் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
நஜிப்புக்கு எதிரான முதன்மையான வழக்கை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு வெற்றி பெற்றதாக நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா கூறினார்.
பிப்ரவரி 2011, டிசம்பர் 2014 க்கு இடையில் அவரது ஆம் பேங்க் கணக்கில் செலுத்தப்பட்ட 2.28 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி நிதியை உள்ளடக்கிய நான்கு முறை அதிகார துஷ்பிரயோகம், 21 பணமோசடி குற்றச்சாட்டுகள் மீது நஜிப் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
2019 ஆகஸ்ட் 28 முதல் மே 30 வரை 253 நாட்கள் நீடித்த இந்த வழக்கு விசாரணையில் மொத்தம் 50 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 5:17 pm
பேராக் ம இ கா கல்வி நிதியுதவியாக 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது: டான்ஸ்ரீ இராமசாமி
December 5, 2025, 8:56 am
புங் மொக்தார் காலமானார்
December 4, 2025, 12:18 pm
திருவள்ளுவர் சிலை விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையாக்க வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
December 3, 2025, 9:29 am
சம்சுல் ஹாரிஸ் மரணத்திற்கு காரணமான நபரை போலிசார் அடையாளம் கண்டு வருகின்றனர்: டத்தோ குமார்
December 2, 2025, 1:09 pm
பத்துமலை திருத்தலத்திற்கு அஜித்குமார் வருகை
December 2, 2025, 11:36 am
காலியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளை நிரப்ப பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன
December 1, 2025, 6:09 pm
