செய்திகள் மலேசியா
நம்பிக்கை ஊடக தலைமையகத்திற்குத் தகவல், தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் சிறப்பு வருகை
கோலாலம்பூர்:
மலேசியாவின் முதல் நிலை தமிழ் இணைய ஊடகமாக விளங்கி வரும் நம்பிக்கை ஊடகத்திற்கு மலேசியாவின் தகவல், தொடர்பு அமைச்சின் துணையமைச்சர் மாண்புமிகு தியோ நீ சிங் சிறப்பு வருகை புரிந்தார்.
மாலை 4 மணியளவில் துணையமைச்சர் தியோ நீ சிங், தலைமையகத்திற்கு வருகையளித்ததும் அவரை நம்பிக்கை ஊடகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சுஹைனா, நம்பிக்கை ஊடகத்தின் தலைமை மேலாளர் தயாளன் சண்முகம், நம்பிக்கையின் செய்தி ஆசிரியர் ஃபிதாவுல்லா, நம்பிக்கை ஊடகவியலாளர்கள் அனைவரும் வரவேற்றனர்.
துணையமைச்சர் தியோ நீ சிங் நம்பிக்கை குழும உறுப்பினர்களுடன் தேநீர் அருந்தியதோடு அனைவருக்கும் தீபாவளி அன்பளிப்பு வழங்கினார்.
நம்பிக்கை தலைமையகத்தை பார்வையிட்ட துணையமைச்சர், நம்பிக்கை ஊடகத்தின் செய்திகளையும் செய்தி செய்யும் அணுகுமுறைகளையும் தலைமை செய்தி ஆசிரியர் ஃபிதாவுல்லா முறையாக விளக்கினார்.
அதுமட்டுமல்லாமல், நம்பிக்கை குழுமத்தின் பிரம்மாண்டமான ஏற்பாட்டில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நம்பிக்கை நட்சத்திர விருது விழா குறித்து தலைமை மேலாளர் துணையமைச்சருக்கு விளக்கமளித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நம்பிக்கை தலைமையகத்திற்கு தாம் வருகை புரிந்தது தமக்கு பெரும் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்வதாக துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2024, 6:58 pm
அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழாவில் திரண்ட பொதுமக்கள்
October 28, 2024, 4:24 pm
அமெரிக்காவுக்குப் பயந்து இஸ்ரேலை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை: மகாதீர் குற்றச்சாட்டு
October 28, 2024, 4:21 pm
தீபாவளி பரிசாக இந்தியர்களுக்கு நிலப்பட்டா: பேராக் அரசு வழங்கியது
October 28, 2024, 4:20 pm
அமானா இக்தியாரின் பெண் திட்டம் இந்திய பெண்களின் உருமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
October 28, 2024, 2:56 pm
சர்வதேச நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை உருவாக்கி மலேசியாவிற்கு உதவ வேண்டும்: பிரதமர் அன்வார்
October 28, 2024, 2:40 pm