நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவுக்குப் பயந்து இஸ்ரேலை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை: மகாதீர் குற்றச்சாட்டு

புத்ரா ஜெயா:

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குப் பயப்படுவதால் இஸ்ரேல் எதிர்க்க யாருக்கும் துணிவில்லை என்று முன்னாள் பிரதமர்  துன் டாக்டர் மகாதீர் கூறினார். 

அமெரிக்காவிற்கு எதிரான எந்த நடவடிக்கையும் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் என்றார் அவர். 

இஸ்ரேல் ஏற்கனவே லெபனானை ஆக்கிரமித்துவிட்டது.

லெபனானுக்குப் பிறகு இஸ்ரேல் யாரைத் தாக்க திட்டம் வைத்துள்ளது என்று துன் மகாதீர் கேள்வி எழுப்பினார்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினர் வேறு இடங்களுக்குச் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஆயுதங்கள் ஏந்திய இஸ்ரேல் இனப்படுகொலையைத் தொடரும் என்றும் மகாதீர் கூறினார்.

இஸ்ரேல் தங்கள் தாக்குதல்களை நிறுத்தாது என்றார் மகாதீர். 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset