
செய்திகள் உலகம்
இந்தியாவுக்கு கனடா துரோகம் செய்துவிட்டது: இந்திய தூதர்
புது டெல்லி:
கனடா இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டது என அந்நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா குற்றம்சாட்டினார்.
காலிஸ்தான் முன்னணித் தலைவர்களில் ஒருவரா ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் இந்திய உளவு அமைப்புகளும்தான் காரணம் என்று கனடா குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரொடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தூதரக பிரச்னையில் இந்திய தூதர் சஞ்சய் வர்மா இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: அக்டோபர் 12ம் தேதி கனடா வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நான் சென்றபோது நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புடுத்தி கூறினர்.
தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன்தகவல் அளிக்கப்படவில்லை. எங்களை தவறான முறையில் நடத்தியதுடன் கனடா அதிகாரிகள் முதுகில் குத்தியதற்கு சமமான நடவடிக்கையாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 8:19 pm
சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல் சில ரயில் பயணங்களுக்குக் கட்டணம் இல்லை
October 19, 2025, 7:51 pm
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
October 19, 2025, 9:36 am
டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm