
செய்திகள் உலகம்
இந்தியாவுக்கு கனடா துரோகம் செய்துவிட்டது: இந்திய தூதர்
புது டெல்லி:
கனடா இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டது என அந்நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா குற்றம்சாட்டினார்.
காலிஸ்தான் முன்னணித் தலைவர்களில் ஒருவரா ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் இந்திய உளவு அமைப்புகளும்தான் காரணம் என்று கனடா குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரொடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தூதரக பிரச்னையில் இந்திய தூதர் சஞ்சய் வர்மா இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: அக்டோபர் 12ம் தேதி கனடா வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நான் சென்றபோது நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புடுத்தி கூறினர்.
தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன்தகவல் அளிக்கப்படவில்லை. எங்களை தவறான முறையில் நடத்தியதுடன் கனடா அதிகாரிகள் முதுகில் குத்தியதற்கு சமமான நடவடிக்கையாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 5:10 pm
சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்த பெண் – பேய் படம் போல் காட்சி, காணொலி வைரல்
June 1, 2025, 11:21 am
2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியானார் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா
June 1, 2025, 11:19 am
விமான நிலையத்தின் பெண்ணின் முக ஒப்பனையைக் கலைக்க சொன்ன அதிகாரிகள்
May 31, 2025, 4:58 pm
பாலியில் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
May 28, 2025, 3:40 pm
55 வயதில் 31-ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி காமி ரீட்டா சாதனை
May 27, 2025, 6:25 pm
துபாயில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது
May 27, 2025, 6:13 pm
சீனாவில் 30 லட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு
May 27, 2025, 2:02 pm