நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு: டிங்கில் தாமான் பெர்மாத்தா மஇகா கிளை வழங்கியது

டிங்கில்:

வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பை டிங்கில் தாமான் பெர்மாத்தா மஇகா கிளை வழங்கியது.

டிங்கில் வட்டாரத்தில் வசிக்கும் வசதி குறைந்த சுமார் 70 பேருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான இந்த தீபாவளி அன்பளிப்பு கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக அக்கிளையின் தலைவர் ந. பத்மநாதன் தெரிவித்தார். 

ஆண்டுதோறும் தீபாவளியின் போது இவ்வட்டார மக்களுக்கு இது போன்ற அன்பளிப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறினார். 

சமுதாயத்தில் வசதி குறைந்த மக்களுக்கு உதவும் மனப்பான்மை வசதி உள்ளவர்களுக்கு இருக்க வேண்டும். 

தீபாவளியின் போது மட்டுமல்லாமல் எல்லா காலங்களிலும் வசதி குறைந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதோடு ரொக்க அன்பளிப்பை வழங்கிய முன்னாள் செனட்டரும் மஇகா கட்டடக்குழுத் தலைவருமான என்.ரவிச்சந்திரனுக்கு பத்மநாதன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிப்பாங் மஇகா தொகுதித் தலைவர் எம். குணாளன், டிங்கில் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் நோர் அஸ்லியின் பிரதிநிதி, சிலாங்கூர் மாநில மஇகா செயலாளர் ம. சசிதரன், கிள்ளான் மஇகா தொகுதித் தலைவர் தர்மலிங்கம், சிப்பாங் அம்னோ தொகுதியின் உதவித் தலைவர் டத்தோ நிகாடி டின், பந்திங் குணா கிளைத் தலைவர்கள், சிலாங்கூர் மாநில மஇகா பொறுப்பாளர்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset