நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டு எல்லைகளில் சுவர்களைக் கட்ட மலேசியா திட்டம்: ஸலேஹா

புத்ராஜெயா:

நாட்டின் எல்லைகளில் சுவர்கள் கட்டுவது பற்றிப் பரிசீலிப்பதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸலேஹா முஸ்தஃபா இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் தாய்லந்து எல்லையில் இருக்கும் கிளந்தான்  மாநிலத்திலும், கெடா மாநிலத்திலும் சுவர் எழுப்பத் திட்டமிடப்படுகிறது. 

அதோடு இந்தோனேசிய எல்லையில் இருக்கும் சபா மாநிலத்திலும் சுவர் கட்டுவது பற்றி ஆராயப்படுவதாக அவர் சொன்னார்.

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் மூலம் மலேசிய-தாய்லந்து, மலேசிய-இந்தோனேசிய எல்லைப்பகுதிகளில் சுவர்கள் எழுப்பத் திட்டமுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கள்ளக் கடத்தல், ஆள்கடத்தல் சம்பவங்களைத் தடுக்க, தடுப்புச் சுவர் போட நினைக்கிறது மலேசியா என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset