நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனக் கொடி அணிவகுப்புக்கு போலிஸ் அனுமதி வழங்கவில்லை: பேராக் போலிஸ் தலைவர்

ஈப்போ:

தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரத்தில் வெளிநாடுகளின் கொடிகளை ஏந்தியபடி நடத்தப்பட்ட அணிவகுப்புக்கு போலிஸ் அனுமதி வழங்கவில்லை.

பேரா மாநில போலிஸ் தலைவர் அஸிசி மாட் அரிஸ் இதனைத் தெரிவித்தார்.

நேற்று இரவு 8 மணி முதல் 11.30 மணி வரை சுமார் 400 பார்வையாளர்களுடன் அலங்கரிக்கப்பட்ட காரை உள்ளடக்கிய மத ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் போலிசாரின் அனுமதி இன்றி நடைபெற்றது.

ஆகையால் இப் பேரணி தொடர்புடையவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்.

குறிப்பாக விசாரணைக்கு உதவ சீனாவில் இருந்து வந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைத்து வெளிநாட்டு பங்கேற்பாளர்களையும் ஆஜர்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset