நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனப் பிரஜைகளை கடத்தி பணம் கேட்ட ஐவர் கைது: டத்தோ ஒமர் கான்

கிள்ளான்:

சீனப் பிரஜைகளை கடத்தி பணம் கேட்ட ஐவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் இதனை கூறினார்.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி புத்ராஜெயா மெக்ஸ் நெடுஞ்சாலையின் டோல் சாவடியில் சம்பந்தப்பட்ட ஆடவர் கடத்தப்பட்டடார்.

பாதிக்கப்பட்டவர் சீனாவுக்குத் திரும்புவதற்காக விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.

இக் கடத்தல் சம்பவம் தொடர்பில் போலிசார் ஐவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சீன ஆடவர்கள் அக்டோபர் 28ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளையில் உள்ளூர் ஆடவர் ஒருவர் அக்டோபர் 29ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset