நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விஜயலட்சுமிக்கு நடந்த அசம்பாவிதம் அனைவருக்குமான எச்சரிக்கை: ஓம்ஸ் தியாகராஜன்

கோலாலம்பூர்:

விஜயலட்சுமிக்கு நடந்த அசம்பாவிதம் அனைவருக்குமான ஓர் எச்சரிக்கையாகும்.

ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் இதனை கூறினார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டார்.

அவரை தேடும் பணி நிறுத்தப்பட்டதால் அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மரணமடைந்த விஜயலட்சுமியின் குடும்பத்தினருக்கு தமிழ்மலர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிதியை வழங்கிய ஓம்ஸ் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

விஜயலட்சுமியின் மரணம் ஒரு விபத்தாக இருந்தாலும் இதற்கு கவனக்குறைவும் காரணமாக உள்ளது.

அதன் அடிப்படையில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் அனைவருக்குமான ஓர் எச்சரிக்கையாக நான் கருதுகிறேன்.

அதே வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset