நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் அம்மா விஜயலட்சுமி என்றாவது திரும்பி வருவார் என காத்துக் கொண்டிருக்கிறேன்: புதையுண்டவரின் மகன் சூர்யா

கோலாலம்பூர்:

என் அம்மா விஜயலட்சுமி என்றாவது திரும்பி வருவார் என காத்துக் கொண்டிருக்கிறேன் என்று விஜயலட்சுமியின் மகன் சூர்யா கூறினார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டார்.

அவரைத் தேடும் பணிகள் பல நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு இறுதியில் கைவிடப்பட்டது. 

விஜயலட்சுமி மரணமடைந்துவிட்டார்  என முடிவு செய்த பின் அவரின் குடும்பத்தினர் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் அவரின் மகன் சூர்யா மலேசியாவுக்கு மீண்டும் வந்துள்ளனர்.

விஜயலட்சுமியின் மறைவையொட்டி தமிழ்மலர் நாளிதழ் சார்பில் வசூலிக்கப்பட்ட நிதியுதவி அவரிடம் வழங்கப்பட்டது.

ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் இந்த உதவியை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா,

என் அம்மா எங்கோ வெளியே சென்றிருக்கிறார் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

குறிப்பாக என் அம்மா விஜயலட்சுமி என்றாவது ஒரு நாள் திரும்பி வருவார் என காத்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் என் அம்மாவுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் எங்களுக்கு உதவிய அனைத்து மலேசியர்களுக்கும் மலேசிய அரசாங்கத்திற்கும் எனது நன்றிகள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset