நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் மன்னிப்பைப் பிரதமர் அன்வார் ஏற்றுக் கொண்டார்

புத்ரா ஜெயா:

1எம்டிபி நிறுவனத்தில் நடந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கோரிய மன்னிப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1எம்டிபி நிறுவனத்தில் நடந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

தனது மேற்பார்வையில் இருந்தபோது 1எம்டிபியில் நடந்த அனைத்து மோசடிகளையும் அறிந்த பிறகு தான் மிகவும் வேதனையடைந்ததாக நஜிப் ஒப்புக் கொண்டார்.

முன்னாள் நிதியமைச்சர், பிரதமர் என்ற முறையில், அனைத்து மலேசியர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு எதுவும் தன்னால் கூற முடியாது என்றும் அவர் கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset