செய்திகள் மலேசியா
நஜிப்பின் மன்னிப்பைப் பிரதமர் அன்வார் ஏற்றுக் கொண்டார்
புத்ரா ஜெயா:
1எம்டிபி நிறுவனத்தில் நடந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கோரிய மன்னிப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1எம்டிபி நிறுவனத்தில் நடந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
தனது மேற்பார்வையில் இருந்தபோது 1எம்டிபியில் நடந்த அனைத்து மோசடிகளையும் அறிந்த பிறகு தான் மிகவும் வேதனையடைந்ததாக நஜிப் ஒப்புக் கொண்டார்.
முன்னாள் நிதியமைச்சர், பிரதமர் என்ற முறையில், அனைத்து மலேசியர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு எதுவும் தன்னால் கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 25, 2024, 8:35 pm
சீனக் கொடி அணிவகுப்புக்கு போலிஸ் அனுமதி வழங்கவில்லை: பேராக் போலிஸ் தலைவர்
October 25, 2024, 8:26 pm
சீனப் பிரஜைகளை கடத்தி பணம் கேட்ட ஐவர் கைது: டத்தோ ஒமர் கான்
October 25, 2024, 8:21 pm
நாட்டு எல்லைகளில் சுவர்களைக் கட்ட மலேசியா திட்டம்: ஸலேஹா
October 25, 2024, 8:17 pm
வீட்டுக் காவல் சட்டத்துக்கும் நஜிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை: ஃபஹ்மி
October 25, 2024, 6:51 pm
எதிர்மறையான கருத்துகள் தான் எனது வெற்றிக்கு அடித்தளம்: டத்தோ சிவக்குமார்
October 25, 2024, 5:57 pm
பட்ஜெட் தொடர்பில் பிரதமர் மீதான விமர்சனங்கள் இந்திய சமுதாயத்தின் பிரச்சினையைத் தீர்க்க உதவாது: குணராஜ்
October 25, 2024, 5:38 pm
விஜயலட்சுமிக்கு நடந்த அசம்பாவிதம் அனைவருக்குமான எச்சரிக்கை: ஓம்ஸ் தியாகராஜன்
October 25, 2024, 5:36 pm
டெங்கில் இடைநிலைப்பள்ளியில் டத்தோ ஹஜி அப்துல் ஹமித் பி.வி மண்டபம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2024, 5:03 pm