
செய்திகள் உலகம்
மகன் மரணத்துக்கு செயற்கை நுண்ணறிவு பேசியதே காரணம்: தாய் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் ஃப்லொரிடா (Florida) பகுதியில் "Character.AI" எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் மீது ஒரு பெண் வழக்குத் தொடுத்துள்ளார்.
அவருடைய 14 வயது மகன் பிப்ரவரி மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்ததுள்ளார்.
நிறுவனத்தின் தானியக்க உரையாடல் வசதி (chatbot) உண்மையான நபரைப் போலவே உரையாடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
தம் மகன் பாலியல் ரீதியான உரையாடல்கள், தற்கொலை பற்றிய சிந்தனைகள் போன்றவற்றில் ஈடுபட அந்தச் சேவை காரணம் என்று தாய் சொன்னார்.
சம்பவத்திற்கு "Character.AI" நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தது.
மேலும் 18 வயதுக்குக் குறைந்த பயனீட்டாளர்களைப் பாதுகாக்கப் புதிய முயற்சிகள் எடுப்பதாக அது சொன்னது.
"Character.AI" நிறுவனர்கள் முன்னதாக Googleஇல் பணிபுரிந்தனர்.
எனவே Googleக்கும் அந்த உரையாடல் சேவையின் உருவாக்கத்தில் பங்குண்டு என்று வலியுறுத்தினார்.
இருப்பினும், Google குற்றச்சாட்டை மறுத்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm
வரிக் குறைப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
July 6, 2025, 11:19 am
12 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
July 6, 2025, 11:05 am
உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்
July 6, 2025, 10:58 am
திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி: பயத்தில் விமானத்தின் இறக்கைகளிலிருந்து குதித்த பயணிகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am