நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பத்மநாப சுவாமி கோயில் வெண்கலப் பாத்திரம் திருட்டு: தெரியாமல் எடுத்ததாக மருத்துவரை விடுவித்த கேரள போலிஸ்

புது டெல்லி: 

திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வெண்கலப் பாத்திரத்தைத் திருடியதாக ஹரியாணாவில் மருத்துவர் உள்பட 4 பேர் கைது செய்த கேரள போலிஸார், பின்னர் தெரியாமல் எடுத்த சென்றதாக கூறி தண்டனையில்லாமல் அவர்களை விடுத்துள்ளது.

பூஜைகளின்போது உருளி என்று கூறப்படும் அந்த விலைமதிப்பற்ற வெண்கலப் பாத்திரம் திருடுபோனதாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து ஹரியாணாவைச் சேர்ந்த மருத்துவர் உள்பட 4 பேரை கேரள போலீஸார் கைது செய்து திருவனந்தபுரம் அழைத்து வந்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்.

இதையடுத்து அவர்கள் வேண்மென்றே உருளியை எடுத்து செல்லவில்லை என்று கூறி தண்டனையில்லாமல் விடுவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset