நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

1 கோடி ரூபாயை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய்

புது டெல்லி:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விவசாயி வீட்டில் திருடப்பட்ட ரூ. 1.07 கோடியை மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் உடனடியாக கண்டுபிடித்தனர்.

நிலத்தை விற்ற பணம் ரூ. 1.07 கோடியை வீட்டில் வைத்துவிட்டு விவசாயி வெளி ஊர் சென்றுள்ளார். அவரது குடிசை விட்டிற்குள் நுழைந்து இருவர் பணத்தை திருடிச் சென்றனர்.

போலீஸ் மோப்ப நாயான "பென்னி'  புத்தா என்பவரின் வீட்டுக்கு சென்று நின்றது. தொடர்ந்து சந்தேகிக்கப்படும் 30 பேரை வரிசையாக நிற்கவைத்தபோதும் மோப்ப நாய் பென்னி புத்தாவையை மோப்பப்பிடித்து காண்பித்தது.

பின்னர் புத்தாவின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 53. 9 லட்சம் மீட்கப்பட்டது. மீதமுள்ள தொகை அவரது கூட்டாளியான விக்ரம் வீட்டில் மீட்கப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset