நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு இந்து அறப்பணி வாரியம், செக்கினா பிஆர் வாயிலாக 28 தமிழ்ப்பள்ளிகளிக்கு கால்பந்து உபகரணங்கள் வழங்கப்பட்டன: கிறிஸ்டபர் ராஜ்

ஜார்ஜ்டவுன்:

பினாங்கு இந்து அறப்பணி வாரியம், செக்கினா பிஆர் வாயிலாக 28 தமிழ்ப்பள்ளிகளிக்கு கால்பந்து உபகரணங்கள் வழங்கப்பட்டன.

செக்கினா பிஆர் தலைமை இயக்குநர் கிறிஸ்டபர் ராஜ் இதனை தெரிவித்தார்.

பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில்
அடிமட்ட அளவில் கால்பந்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அதேவேளையில் நமது பிள்ளைகள் கால்பந்து விளையாடுவதில் ஆர்வத்தையும் கனவுகளையும் அதிகரிக்கவும் உதவுகிறது.

பினாங்கைப் பூர்வீகமாகக் கொண்ட நான், இந்த உதவிகள் பினாங்கில் உள்ள இளம் திறமைகளின் வளர்ச்சிக்கு ஊக்கியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

செக்கினா பிஆர் பினாங்கில் விளையாட்டு வளர்ச்சிக்கு உதவுவதில் உறுதியுடன் இருக்கும்.

குறிப்பாக பினாங்கில் கால்பந்து வள்ர்ச்சியில்  நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு கால்பந்து உபகரணங்கள் வழங்கிய நிகழ்வில் பேசிய கிறிஸ்டபர் ராஜ் இதனை கூறினார்.

பாகான் டாலாம் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், இந்து அறப்பணி வாரியத் தலைவர் ராயர், உதவித் தலைவர் லிங்கேஸ்வரன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset