நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட் கிள்ளான் இந்திய முஸ்லிம் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா 

கிள்ளான்:

அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பாக இயங்கி வரும் போர்ட் கிள்ளான் இந்திய முஸ்லிம் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா நாளை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. 

மாசா பல்கலைக் கழகத் தலைவரும் செனட்டருமான பேராசிரியர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஹாஜி முஹம்மது ஹனீஃபா பின் ஹாஜி அப்துல்லாஹ் தலைமையில் இந்த விழா நடைபெறும் என்று பெர்சத்துவான் இந்திய முஸ்லிம்  பெலபுஹான் கிள்ளான் தலைவர் அப்துல் புஹாரி கரீம் கூறினார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வியலை சொற்பொழிவாற்ற இருக்கிறார் மஸ்ஜித்  இந்தியா கிள்ளான் பள்ளிவாசல் இமாம் மௌலவி ஹாபிழ் அஹ்மது ஹுசைன் கௌஸ் முஹம்மது என்றும் முன்னதாக மத்ரஸா இலாஹிய்யாவின் உஸ்தாத் அபூசாலிஹ் மிஸ்பாஹி கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைக்க இருக்கிறார். 

நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் உதவி வழங்கப்பட உள்ளதாக ஹாஜி அப்துல் புஹாரி கரீம் கூறினார்.

முஹம்மது மஹாதீர் பின் முஹம்மது யூசுப்பின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடையும் என்றும் பொது மக்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ள வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார் ஹாஜி புஹாரி.

இலக்கம் 22, 24, Lorong Kulor, Pelabuhan Klang எனும் முகவரியில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.  

 - ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset