செய்திகள் மலேசியா
கிளாந்தானில் RM3,00,000 மதிப்புள்ள 84 ஊர்வனங்கள் பறிமுதல்
தும்பாட்:
பெங்காலான் கூபோர் அருகேயுள்ள கம்போங் மெந்துவாவில் பொது செயல்பாட்டு குழு நடத்திய சோதனையில் 300, 000 ரிங்கிட் மதிப்புள்ள 84 உயிருள்ள ஊர்வனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் 70-க்கும் மேற்பட்டவை பாம்புகளாகும்.
நேற்று காலை 6.30 மணியளவில் சுங்கை கோலோக் ஆற்றங்கரை அருகே பல பெட்டிகள், பிளாஸ்டிக் கொள்கலன்களுடன் சந்தேகத்திற்கிடமான நபர்கள் கடத்திச் சென்றதைக் கண்ட குழு அவர்களை பிடிக்க முயன்றதாகவும் ஆனால் அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் தென்கிழக்கு படைப்பிரிவின் தளபதி டத்தோ நிக் ரோஸ் ஆசான் நிக் அப் ஹமீத் கூறினார்.
தொடர்ந்து, பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் கொள்கலன்களைச் சோதனையிட்ட பிறகு, அவர்கள் பல்வேறு வகையான பாம்புகள், ஆமைகள் மற்றும் 'ஸ்பைனி டெய்லர் மானிட்டர்' இனத்தின் பல்லிகளைக் கண்டுபிடித்தனர்.
மேலும், இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட பிற ஊர்வனவற்றில் ஒன்பது ஆமைகள் மற்றும் ஐந்து பல்லிகள் அடங்கும்.
அவை தாய்லாந்தில் இருந்து உள்ளூர் சந்தைக்காக கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 4:12 pm
2025ஆம் ஆண்டுக்ககான வரவு செலவு திட்டம்: நேரடி நிலவரங்கள் (LIVE)
October 18, 2024, 3:40 pm
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் உடல் நிலையில் முன்னேற்றம்: ஐ.ஜே.என் தகவல்
October 18, 2024, 3:37 pm
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்: நாடாளுமன்றம் வந்தடைந்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்
October 18, 2024, 1:47 pm
கிள்ளானில் வெள்ளத்தால் தீபாவளி ஏற்பாடுகள் முடங்கின
October 18, 2024, 1:32 pm
சிகரெட் வாங்க வெளியே சென்ற ஆடவர் காணவில்லை
October 18, 2024, 1:13 pm
முத்தம் கொடுப்பதன் மூலம் எச்ஐவி நோய் பரவாது: ஆய்வில் தகவல்
October 18, 2024, 12:51 pm