செய்திகள் உலகம்
உலகெங்கும் ஆட்குறைப்புச் செய்யும் போயிங் ரக விமானம் நிறுவனம்
வாஷிங்டன்:
போயிங் நிறுவனம் உலகெங்கும் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளது.
இதனால் போயிங் ஊழியர்களில் 10 விழுக்காட்டினர் பாதிக்கப்படுவர்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் நிர்வாகிகள்,மேலாளர்கள் ஆகியோரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களின் வேலை நிறுத்தம், விமானங்களின் தரம் மீது அக்கறை, முதலிய பிரச்சினைகளுக்கு இடையே போயிங் அந்நடவடிக்கையை எடுக்கிறது.
அமெரிக்காவில் சம்பள உயர்வு கேட்டு சுமார் 33,000 ஊழியர்கள் ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
737 MAX, 767, 777 ரக விமானங்களின் தயாரிப்பு அதனால் தாமதம் அடைந்துள்ளது.
777X ரக விமானங்களின் முதல் தொகுதி 2026-ஆம் ஆண்டில்தான் தயாராகும் என்று போயிங் விமான நிறுவனம் கூறியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 14, 2024, 11:49 am
தைவானைச் சுற்றி சீனா இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது
October 14, 2024, 11:06 am
டெஸ்லா கார் தீப்பிடித்தது: நான்கு பேர் பலி
October 13, 2024, 1:55 pm
முல்லேரியா - களனிமுல்ல பகுதியில் தோணியில் பயணித்த ஒருவர், தோணி கவிழ்ந்து உயிரிழந்தார்
October 13, 2024, 9:13 am
இஸ்ரேலுக்கு யார் உதவினாலும் கடும் நடவடிக்கை: மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை
October 12, 2024, 8:51 pm
ரஷியாவில் வட கொரிய படையினர்
October 12, 2024, 12:20 pm
தீபாவளியை வரவேற்கத் தயாராகும் சிங்கப்பூர்
October 11, 2024, 2:20 pm
தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரை இறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்
October 11, 2024, 1:10 pm
இலங்கையில் இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு
October 10, 2024, 5:09 pm