செய்திகள் உலகம்
இலங்கையில் இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு
கொழும்பு:
2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நேரம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
அத்துடன், 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேச்சைக் குழுக்களும் நேற்றைய தினம் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், பொதுத் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட வேண்டிய பணத்தின் அளவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும், இராஜகிரியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தைச் சுற்றியும் வேட்புமனு கையளிக்கும் காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, மாவட்ட பிரதி காவல் துறை ஊடாக பொதுத் தேர்தலை ஒருங்கிணைக்க பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2024, 11:49 am
தைவானைச் சுற்றி சீனா இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது
October 14, 2024, 11:06 am
டெஸ்லா கார் தீப்பிடித்தது: நான்கு பேர் பலி
October 13, 2024, 1:55 pm
முல்லேரியா - களனிமுல்ல பகுதியில் தோணியில் பயணித்த ஒருவர், தோணி கவிழ்ந்து உயிரிழந்தார்
October 13, 2024, 9:13 am
இஸ்ரேலுக்கு யார் உதவினாலும் கடும் நடவடிக்கை: மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை
October 12, 2024, 8:51 pm
ரஷியாவில் வட கொரிய படையினர்
October 12, 2024, 2:34 pm
உலகெங்கும் ஆட்குறைப்புச் செய்யும் போயிங் ரக விமானம் நிறுவனம்
October 12, 2024, 12:20 pm
தீபாவளியை வரவேற்கத் தயாராகும் சிங்கப்பூர்
October 11, 2024, 2:20 pm
தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரை இறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்
October 10, 2024, 5:09 pm