நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான ரத்தன் டாட்டா காலமானார்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

மும்பை:

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. 

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. 

டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர்  ரத்தன் டாட்டாவின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தைச் சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

86 வயதான ரத்தன் டாட்டா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ரத்தன் டாட்டா, அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

அதில் தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாகவும், வயது மற்றும் உடல்நிலை சார்ந்த வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்குச் சென்றிருப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையே, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக,  மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாட்டா, பத்மபூஷண்,பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset