செய்திகள் இந்தியா
கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணம்: Google Maps மீது விசாரணை
உத்தரப் பிரதேசம்:
இந்தியாவில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணமடைந்தது தொடர்பில் Google Maps மீது விசாரணை நடத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் மூவர் மாண்டனர்.
காரில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுகொண்டிருந்த அவர்கள் Google வரைபடத்தின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
வரைபடம் அவர்களை கட்டி முடிக்கப்படாத ஒரு மேம்பாலத்துக்கு இட்டுச்சென்றது.
அதைக் கவனிக்காத ஆடவர்கள் மேம்பாலத்திலிருந்து ராம்கங்கா ஆற்றங்கரையில் விழுந்தனர்.
மாண்டோர் குடும்பங்களுக்கு Google இரங்கல் தெரிவித்தது.
அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்கவுள்ளதாக அது கூறியது.
Google Maps அதிகாரி ஒருவரைக் காவல்துறையினர் ஏற்கெனவே விசாரித்திருக்கின்றனர்.
பொதுப்பணித் துறையைச் சேர்ந்த சிலரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
