செய்திகள் இந்தியா
கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணம்: Google Maps மீது விசாரணை
உத்தரப் பிரதேசம்:
இந்தியாவில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணமடைந்தது தொடர்பில் Google Maps மீது விசாரணை நடத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் மூவர் மாண்டனர்.
காரில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுகொண்டிருந்த அவர்கள் Google வரைபடத்தின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
வரைபடம் அவர்களை கட்டி முடிக்கப்படாத ஒரு மேம்பாலத்துக்கு இட்டுச்சென்றது.
அதைக் கவனிக்காத ஆடவர்கள் மேம்பாலத்திலிருந்து ராம்கங்கா ஆற்றங்கரையில் விழுந்தனர்.
மாண்டோர் குடும்பங்களுக்கு Google இரங்கல் தெரிவித்தது.
அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்கவுள்ளதாக அது கூறியது.
Google Maps அதிகாரி ஒருவரைக் காவல்துறையினர் ஏற்கெனவே விசாரித்திருக்கின்றனர்.
பொதுப்பணித் துறையைச் சேர்ந்த சிலரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 6:32 pm
25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; ரூ.289 கோடி விழலுக்கு இறைத்த நீர்: PDUIA-ன் அவல நிலை
April 27, 2026, 5:20 pm
புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு: ஐவர் காயம்
April 27, 2026, 3:17 pm
மகாராஷ்டிராவை உலுக்கும் வன்கொடுமை வழக்கு: அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்
April 26, 2026, 10:20 pm
டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம்: மஞ்சள் எச்சரிக்கை
April 25, 2026, 9:28 pm
மலேசியா, இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதித்தால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரும்
April 25, 2026, 4:21 pm
600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி
April 24, 2026, 11:34 am
இந்தியாவில் நீர் பருகும்படி பள்ளிகளில் ஒலிக்கும் மணி
April 22, 2026, 12:48 pm
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
April 21, 2026, 5:40 pm
