செய்திகள் இந்தியா
கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணம்: Google Maps மீது விசாரணை
உத்தரப் பிரதேசம்:
இந்தியாவில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணமடைந்தது தொடர்பில் Google Maps மீது விசாரணை நடத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் மூவர் மாண்டனர்.
காரில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுகொண்டிருந்த அவர்கள் Google வரைபடத்தின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
வரைபடம் அவர்களை கட்டி முடிக்கப்படாத ஒரு மேம்பாலத்துக்கு இட்டுச்சென்றது.
அதைக் கவனிக்காத ஆடவர்கள் மேம்பாலத்திலிருந்து ராம்கங்கா ஆற்றங்கரையில் விழுந்தனர்.
மாண்டோர் குடும்பங்களுக்கு Google இரங்கல் தெரிவித்தது.
அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்கவுள்ளதாக அது கூறியது.
Google Maps அதிகாரி ஒருவரைக் காவல்துறையினர் ஏற்கெனவே விசாரித்திருக்கின்றனர்.
பொதுப்பணித் துறையைச் சேர்ந்த சிலரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
November 20, 2025, 10:27 pm
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
November 19, 2025, 4:47 pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
November 19, 2025, 2:07 pm
