
செய்திகள் இந்தியா
கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணம்: Google Maps மீது விசாரணை
உத்தரப் பிரதேசம்:
இந்தியாவில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணமடைந்தது தொடர்பில் Google Maps மீது விசாரணை நடத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் மூவர் மாண்டனர்.
காரில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுகொண்டிருந்த அவர்கள் Google வரைபடத்தின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
வரைபடம் அவர்களை கட்டி முடிக்கப்படாத ஒரு மேம்பாலத்துக்கு இட்டுச்சென்றது.
அதைக் கவனிக்காத ஆடவர்கள் மேம்பாலத்திலிருந்து ராம்கங்கா ஆற்றங்கரையில் விழுந்தனர்.
மாண்டோர் குடும்பங்களுக்கு Google இரங்கல் தெரிவித்தது.
அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்கவுள்ளதாக அது கூறியது.
Google Maps அதிகாரி ஒருவரைக் காவல்துறையினர் ஏற்கெனவே விசாரித்திருக்கின்றனர்.
பொதுப்பணித் துறையைச் சேர்ந்த சிலரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm