செய்திகள் உலகம்
இஸ்ரேலின் மிகப் பெரிய விமானத் தளத்தை அழித்த ஈரான்
ஜெருசலம்:
இஸ்ரேலின் மிகப் பெரிய நெவடிம் விமானத் தளத்தை ஏவுகணைத் தாக்குதலில் அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் 20க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் அழிக்கப்பட்டதாக ஈரான் பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காஸா, லெபனானில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த ஜூலை மாதம், ஈரானுக்கு சென்றிருந்த ஹமாஸின் முக்கிய தலைவரான மாயில் ஹனீயேவை அந்நாட்டில் வைத்தே இஸ்ரேல் படை கொன்றது.
இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
தொடர்ந்து, லெபனானில் இஸ்ரேல் படையினர் தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், 400-க்கும் மேற்பட்ட பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை ஈரான் தாக்கியது.
மேலும், இந்த தாக்குதல் ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கை என்று ஈரானின் அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.
ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 2:14 pm
"வெளியே போங்கள்": சிட்னி பள்ளிவாசலில் ஆஸ்திரேலிய பிரதமருக்கு கடும் எதிர்ப்பு
March 20, 2026, 12:40 pm
ஈரானின் இயற்கை எரிவாயு வயல் மீதான தாக்குதலால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்?
March 20, 2026, 11:00 am
தலைவன் கொல்லப்பட்டாலும் தடம் மாற மாட்டோம்: ஈரான் புரட்சிகர இராணுவம் சபதம்
March 20, 2026, 10:12 am
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்: பெஞ்சமின் நெதான்யாகு
March 19, 2026, 9:52 pm
"எங்களுக்குத் தெரியாது": ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம்: குறைகூறிய டிரம்ப்
March 19, 2026, 9:49 pm
"மீண்டும் தாயகம் திரும்புவோம்": உயிர்பெற்ற ரஃபா எல்லைப் பகுதி
March 19, 2026, 3:59 pm
அமெரிக்கப் படைகளுக்கு இடம் கொடுத்தது 'சர்வதேசக் குற்றம்'; டெஹ்ரானின் அதிரடி கடிதம்
March 19, 2026, 3:56 pm
ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிரடி: அமெரிக்கா-இஸ்ரேல் சார்பாக செயல்பட்டவர்கள் கைது
March 19, 2026, 1:09 pm
