
செய்திகள் மலேசியா
பேரா மாநில இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் மந்திரி புசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: டான்ஶ்ரீ ராமசாமி
ஈப்போ:
பேரா மாநில இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் மந்திரி புசார் டத்தோஶ்ரீ ஹாஜி சாரணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பேரா மாநில மஇகா தலைவர் டான்ஸ்ரீ எம். இராமசாமி இதனை தெரிவித்தார்.
மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ ஹாஜி சாரணியை மரியாதை நிமிர்த்தத்தின் அடிப்படையில் சந்தித்தேன்.
இச்சந்திப்பில் மாநில மஇகாவின் செயல்திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து மாநில மந்திரி புசாரிடம் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் பேரா மாநில இந்திய சமுதாயத்தின் தேவைகள், பிரச்சினைகள் குறித்தும் மந்திரி புசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
கட்சியை வலுப்படுத்தி, சமுதாயத்துடன் அணுக்கமான உறவினை மேம்படுத்தும் பேரா மாநில மஇகாவின் நடவடிக்கைகளை டத்தோஸ்ரீ சாரணி பெரிதும் வரவேற்றார்.
தேசிய முன்னணி தோழமை உணர்வுடன் மாநில மஇகாவின் செயல் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் அவர் உறுதியளித்தார் என்று டான்ஶ்ரீ ராமசாமி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm