
செய்திகள் மலேசியா
லஹாட் டத்துவில் தாக்குதல் நடத்திய 7 பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நிலை நிறுத்தப்பட்டது
புத்ராஜெயா:
லஹாட் டத்துவில் தாக்குதல் நடத்திய 7 பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் நிலை நிறுத்தியது.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு லஹாட் டத்துவில் தாக்குதல் நடத்தப்பட்டது.
குறிப்பாக மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு எதிராக இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் ஈடுப்பட்ட 7 பிலிப்பைன்ஸ் நாட்டினர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி கூட்டரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழு அவர்களின் மனுவை இன்று ஏகமனதாக நிராகரித்தது.
இதன் மூலம் அவர்களுக்கு எதிரான மரணத் தண்டனை நிலை நிறுத்தப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm