
செய்திகள் விளையாட்டு
சென்னை அணியை பஞ்சராக்கியது பஞ்சாப் அணி
துபாய்:
சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
சென்னை, பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி இன்று துபாயில் நடைபெற்றது.
இதில், பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.
சென்னையில் அதிகபட்சமாக பாஃப் டூ பிள்ஸிஸ் 76 ரன்கள் விளாசியிருந்தார். இதையடுத்து 135 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
அணியின் தொடக்க வீர்ர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில், மயங்க் அகர்வால் 12 ரன்னில் வெளியேற பின்னர் வந்த சர்பராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமலும், ஷாருக்கான் 8 ரன்னிலும் வெளியேறினர்.
அதன் பின்னர் வந்த வீர்ர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற கே.எல் ராகுல் தனி ஒருவனாக அணியின் சென்னை அணியின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 42 பந்துகளில் 98 ரன்கள் விளாசினார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 9:32 am
புதிய ஜெர்சிகளை பார்சிலோனா அறிமுகப்படுத்தியது
July 2, 2025, 8:40 am
பார்சிலோனாவுக்கு திரும்பும் நோக்கில் மெஸ்ஸி?
July 2, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 1, 2025, 10:01 pm
கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இந்தர்மிலான் அதிர்ச்சி
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am