செய்திகள் மலேசியா
விரும்பிய உணவை சாப்பிட முடியவில்லை என்றால் கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் அர்த்தமில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
விரும்பிய உணவை சாப்பிட முடியவில்லை என்றால் கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் எந்த அர்த்தமும் இல்லை.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
சென்னை அம்போலோ மருத்துவமனையின் சுகாதார பாதுகாப்பு பிரிவின் தலைமை இயக்குநர் டாக்டர் சத்தியா ஸ்ரீராம் சிறப்பு வருகையாக மலேசியா வந்துள்ளார்.
சுகாதார பரிசோதனையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் அவர் பேசி வருகிறார்.
அவ்வகையில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் விளக்கங்களை தந்தார்.
டாக்டர் சத்தியா கூறுவது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அதை விட முக்கியம் அவ்வப்போது பரிசோதனைகள் செய்துக் கொள்வது.
நாம் எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் பிடித்த உணவை சாப்பிட வேண்டும்.
அப்படி சாப்பிட முடியவில்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.
ஆகவே, நாம் அவ்வப்போது சுகாதார பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
நம் சமுதாய மக்கள் இப்போது அடிக்கடி சென்னைக்கு சென்று வருகின்றனர்.
அப்படி செல்பவர்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
இந்திய மக்கள் சுகாதார பரிசோதனை விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.
சுகாதார பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு வரும் மலேசியர்களுக்கு வழிகாட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தயாராக உள்ளது என்று டாக்டர் சத்தியா ஸ்ரீராம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 27, 2025, 3:19 pm
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் சாதித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்வியமைச்சர் சந்திப்பார்: குணராஜ்
December 27, 2025, 11:25 am
1 எம்டிபி தண்டனைக்கு எதிராக நஜிப் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்வார்: வழக்கறிஞர் ஷாபி
December 27, 2025, 10:09 am
பழிவாங்குவதற்காக அல்ல, எனது கொள்கையளவில் தொடர்வேன்: நஜிப்
December 27, 2025, 10:05 am
1 எம்டிபி வழக்கில் நஜிப்பிற்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை: 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதம்
December 26, 2025, 1:59 pm
2023 முதல் 620,000 பேருக்கான வேலை வாய்ப்புகளை MYFutureJobs பூர்த்தி செய்துள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
December 26, 2025, 1:42 pm
சவூதி மன்னரிடமிருந்து நன்கொடை பெற்றதை நஜிப் உறுதிப்படுத்தவில்லை: நீதிபதி
December 26, 2025, 1:25 pm
1 எம்டிபி வழக்கு; ஜோ லோ நஜிப்பின் பினாமி என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன: உயர் நீதிமன்றம்
December 26, 2025, 12:00 pm
1 எம்டிபி வழக்கு: அரபு நன்கொடை கடிதம் போலியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது
December 26, 2025, 11:24 am
